Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பாராட்டு கேடயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயன்படுத்தியதற்காக வழங்கப்பட்ட பாராட்டு கேடயம்

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னையில் தொடங்கி வைத்தார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக  பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவிடம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணி அலுவலர்கள்  அந்தக் கேடயத்தை  காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top