Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்க கருத்தரங்கம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நடந்த இந்திய மருத்துவ சங்க கருத்தரங்கில் பங்கேற்ற புதுக்கோட்டை கிளை நிர்வாகிகள்

தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் மருத்துவமனைகள் கூட்டமைப்பு வாரியம் இணைந்து நடத்திய  கிழக்கு மண்டல மருத்துவ கருத்தரங்கம்  ரீனா மித்ரா மஹாலில்   நடைபெற்றது.
கருத்தரங்கில் தஞ்சை மாவட்ட எஸ் .பி.  ராவளி பிரியா மருத்துவ சங்க நிர்வாகிகள் பழனிசாமி, தியாகராஜன், அழகாவெங்கடேசன்,  கார்த்திக்பிரபு  வரதராஜன், அன்புராஜன், ரெங்கராஜன் , பாரதி,   கார்த்திகேயன், பாலமுருகன்,   சசிராஜ், வழக்கறிஞர் குப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று  பேசினர்.

புதுக்கோட்டை மாவட்ட   கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தலைவர் சுவாமிநாதன், செயலாளர்   முகமது சுல்தான், நிதிச் செயலாளர்  கோபாலகிருஷ்ணன்,   ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். சலீம், துணைச் செயலாளர்  ஆறுமுகம், முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பெரியசாமி, செந்தில் மருத்துவமனை நிர்வாகி  செந்தில் அருண் மற்றும்  தமிழ்நாடு கிழக்கு மண்டல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையின்   மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.

மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட .புதுக்கோட்டை  கிளை இந்திய மருத்துவ சங்கத்தினருக்கு    தஞ்சாவூர் இந்திய மருத்துவ சங்கத்தினர் நினைவு பரிசு வழங்கி  கௌரவித் தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top