Close
மார்ச் 7, 2026 9:32 காலை

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் ஒரு சிறந்த கதை சொல்லி..,

பசும்பொன் ஐயாவை போலவே லா.ச.ரா வின் பிறந்த தினமும், இறந்த தினமும் இதே நாளில் தான்.

“லா.ச.ரா அவர்களின் கதைகளைப் படிக்காதவர் தமிழ் சிறுகதை பற்றிப் பேச லாயக்கில்லை” – இப்படிச் சொன்னவர் எழுத்தாளர் சுஜாதா.

தாய்மையின் மேன்மையை, அதன் தெய்வீகத்தை, தியாகத்தை, வலிமையை, வலிகளை அலுக்காமல் எழுத்தில் வடித்தவர் அவர். உறவுகளின் வக்கிரங்களும், பிறழ்வுகளும், துரோகங்களும், பழிவாங்கல்களும் அவர் கதையில் வருவது மிக மிக அபூர்வமே.

அவர் நிகழ்வுகளை கொண்டாடுபவர். யாரும் எதிர்பாராமல் முன்னறிவிப்பின்றி வாழ்வில் நேர்ந்துவிடும் சில அற்புதத் தருணங்களை அவர் ஆராதிப்பவர். படிப்பவர்களையும் அந்த தருணங்களின் ஆச்சரியத்தில் அமிழ்த்தி ஆனந்திப்பவர்.

மரணங்கள், அதுவும் அகாலமாய் வந்து குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துவிடும் அதிர்ச்சி மரணங்களின் தாக்கங்களும், சோகங்களும், வேதனைகளும், காலம் கடந்தும் தங்கிப்போகும் அவற்றின் வடுக்களும் அவரது கதைகளில் அடிக்கடி ஊடுருவி வந்து படிப்பவரின் மனதை பிசையும்.

அதை சமீபமாய் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை உணர்ந்த போது லா.ச.ராவை ஒரு முறை நினைவுகூர முடிந்தது..,

இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top