Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு… திருச்சியிலிருந்து புறப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை

சிஐடியு மாநில செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் சனிக்கிழமை வந்தடைந்த இந்த ஜோதி பயணக்குழுவினருக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மூத்த முன்னோடி உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சிஐடியு 15 -ஆவது மாநில மாநாட்டையொட்டி திருச்சியி லிருந்து புறப்பட்ட தோழர் ஆர்.உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) மாநில மாநாடு வருகின்ற நவம்பர் 4,5,6 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி திருச்சியிலிருந்து தோழர் உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவாக ஜோதி பயணம் நடைபெற்று வருகிறது.

சிஐடியு மாநில செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் இந்த ஜோதி பயணம் சனிக்கிழமை புதுக்கோட்டை வந்தடைந்தது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சின்னப்பா பூங்கா, மேட்டுப்பட்டி, திருவரங்குளம், ஆலங்குடி, வெட்டன்விடுதி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, குன்றாண்டார்கோவில், கீரனூர் வழியாக தொண்டைமான் நல்லூரில் நிறைவடைந்தது.

இந்த ஜோதி பயணக்குழுவில் சிஐடியு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, வி.ரெத்தினவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top