Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அஞ்சலி

ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின்  39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி  நிகழ்ச்சி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில்  31 10 2022  நடைபெற்றது.

ஈ.வி.கே.சம்பத் சாலையில் மண்டல தலைவர் ஆர். விஜயபாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தீபா ஆகியோர் முன்னிலையில், ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ. ஆர். ராஜேந்திரன் இந்திரா காந்தி உருவ திரைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் பயங்கரவாத உறுதிமொழி  வாசிக்க  அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப் பாளர் எம் ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி. எம். ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாபு என்கிற வெங்கடாஜலம், எம். ஆர். அரவிந்த தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பி. ஆறுமுகம், முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு.

மாவட்ட சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே. என் பாஷா, மூன்றாம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக்.

நிர்வாகிகள் கே.ஜெ.டிட்டோ, ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், சதீஷ், சூரம்பட்டி விஜயகுமார், வள்ளிபுரத்தான் பாளையம் எஸ். தங்கவேலு, நடராஜ் செட்டியார், சிவாஜி கணேசன், வேன் ராமசாமி, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர். கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி எம்.பேபி உள்ளிட்டோர்  கலந்து கொண்டு இந்திராகாந்தியின் உருவப்படத்துக்குமலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top