Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

ராகுல் காந்தி பதவி பறிப்பு, திரிபுரா மதவெறி பயங்கரவாதம்: சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மத்திய அரசைக்கண்டித்து புதுகையில் சிபிஎம் கட்சி சார்பில் நடைபுெற்ற ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி பதவி பறிப்பு, திரிபுரா மத ரீதியான  பயங்கர வாத செயலைக் கண்டித்து சிபிஎம்  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு மற்றும் திரிபுரா மாநிலத்தில்  பாஜகவின்  பயங்கரவாத செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.முகமதலிஜின்னா, ஆர்.வி.ராமையா, உள்ளிட்டோர் பேசினர். நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம்,  சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. ஜீவானந்தம், வி.ரெத்தினவேல், தென்றல் கருப்பையா, அ.மணவாளன், பி.வீரமுத்து, டி.சலோமி, பி.சுசிலா, சி.மாரிக்கண்ணு, எஸ்.பாண்டிச்செல்வி, என். பக்ருதீன், கே.தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top