Close
அக்டோபர் 5, 2024 7:19 மணி

திருமயம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் எம். பெருமாள் 10 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

புதுக்கோட்டை

திருமயம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் எம்.பெருமாள் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறார், திருமயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.பி. சரவணன்

திருமயம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும்,  நமனசமுத்திரம்  தொமுச முன்னாள் செயலாளர், திருமயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் தலைருமான எம். பெருமாள் அவர்களின் 10 -ஆம் ஆண்டு நினைவு நாள் (15.1.2024) திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருமயத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவரது  உருவப்படத்துக்கு,  திருமயம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், திருமயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவருமான எம்.பி. சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யாசரவணன்.

அரசம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் எம்.பி. சிவராமன்- லெட்சுமிசிவராமன், அரசம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எம்.பி. குமரேசன், செல்விகுமரேசன், எம்.பி. சுப்பிரமணியன், பிரியா சுப்பிரமணியன் மற்றும்  கே.ஆர்.முருகேசன்- பிரேமா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சி  நண்பர்கள் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top