Close
ஜூலை 4, 2024 5:07 மணி

சோழவந்தான் தொகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

மதுரை

சோழவந்தான் தொகுதியி்ல் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

மதுரை அருகே, சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சோழவந்தான் கடைவீதியில், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் தலைமையில், எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இளைஞர் அணி நகரச் செயலாளர் கேபிள் மணி இனிப்பு வழங்கினார். இதில், அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டி ராஜா, மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், வார்டு செயலாளர் மணிகண்டன், ஊத்துக்குளி சையது கண்ணன்.

மன்னாடிமங்கலத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி மற்றும் ராமு, குருவித்துறையில் கிளைச் செயலாளர் தண்டாயுதம் சி .புதூர் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டுரங்கன்,தேனூரில் சோனைமுத்து, பாலாஜி ஆகியோர் அந்தந்த கிராமத்தில் எம்ஜிஆர் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top