Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

பாஜக அரசைக் கண்டித்து திருமயத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திருமயத்தில் தெற்கு மாவட்டத்தலைவர் ராமசுப்புராம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்பி கார்த்திக்சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அசாம்  மாநில  அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரையை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டவர் களையும் அதற்கு பின்புலமாக இருந்தவர்களையும்  கண்டித்து திருமயம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிஸ் தலைவர், முன்னாள் எம்எல்ஏ- ராம.சுப்புராம் தலைமை வகித்தார்.

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தொடக்கி வைத்தார்.

இதில், நிர்வாகிகள் அக்பர்அலி, மணிகண்டன், அன்பழகன், முருகானந்தம், ஆசிரியர் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் கணேஷ்பிரபு, அரிமளம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ், சிறுபான்மைபிரிவு, எஸ்சி பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top