Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு நாள்: அனைத்துக்கட்சியினர் மலரஞ்சலி

புதுக்கோட்டை

திருமயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த 30 ஆம் நாள் நினைவு நாளையொட்டி  அனைத்துக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த 30 -ஆம் நாளை முன்னிட்டு திருமயம் ஒன்றிய தேமுதிக சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்வில் அனைத்துக்கட்சிகள் சார்பில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருமயம் கடைவீதியில் உள்ள அண்ணா-கலைஞர் சீரணி அரங்கில் தேமுதிக மாவட்டச் செயலர் சசிக்குமார் தலைமையில் ஒன்றியசெயலர் சுப்பிரமணியன் முன்னிலை யில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர், வர்த்தகர் சங்கம், திருமயம் ஊராட்சி,பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், தேமுதிக மகளிரணியினர், பல்வேறு ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள். காவல்துறையினர் பங்கேற்று விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில், கட்சி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பழனிச்சாமி, சுப்பு என்கிற சுப்பிரமணியன், ஆண்டியப்பன், மணிகண்டன், க. ராஜா, மணி, மாரிமுத்து, ராமு, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top