Close
செப்டம்பர் 18, 2024 3:31 காலை

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக அடிமட்ட தொண்டர்களின் போஸ்டரால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி…

சிவகங்கை

சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள சுலரொட்டிகள்

சிவகங்கை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல கட்டங்களாக ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 9 -ஆம் தேதி அன்று தலைமைக் கழகச் செயலாளர் கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்பு, அதிமுக அவசர கூட்டம்  வெள்ளிக்கிழமை  நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்திருந்த சூழலில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் அதிமுகவின் ஆகஸ்ட் 16 -ல் செயற்குழுவா?அதிமுகவுக்கு புதைக்குழுவா? கரன்சியா? கழகமா? செயற்குழு உறுப்பினர்களே கவனமாக முடிவெடுங்கள் என அச்சிடப்பட்டுள்ளது.  சென்னையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை கூடும்  நிலையில் அதிமுகவின் அடிமட்ட தொண்டரின் இந்த சுவரொட்டியால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அணியினர் இந்த சுவரொட்டிகளை ஒட்டி இருக்கலாம் என அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top