மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்திரமேரூர் அடுத்த சாலவாக்த்தில் எம்எல்ஏ க. சுந்தர், திமுக 102 வயது மூத்த நிர்வாகி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக வினர் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக செம்மொழி நாளாக கொண்டாட திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் 102 என வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக் வெட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலும், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மற்றும் திருமுக்கூடல் பகுதியை சேர்ந்த 102 வயதான திமுக மூத்த நிர்வாகி ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பிரம்மாண்டமான கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.