Close
மார்ச் 7, 2026 2:06 மணி

வாக்குறுதியை ஏமாற்றிய முதல்வர்: தென்காசி எம்எல்ஏ புலம்பல்

தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆதங்கத்துடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அனைத்து அரசியல் கட்சியின் பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் திமுக சார்பில் கடந்த தேர்தலில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அடவிநயினார் அணையில் இருந்து வரக்கூடிய உபரி நீரானது சுரண்டை முதல் ஊத்துமலை வரை விவசாய நிலங்கள் பயன்படகூடிய வகையில் கால்வாய் அமைக்கக்கூடிய திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூபாய் 74 கோடி மதிப்பீட்டில் திட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களை சந்தித்தும் இதுவரை எந்தவித பயனும் கிடைக்கவில்லை. தென்காசிக்கு சமீபத்தில் வந்த முதல்வர் இந்த திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தென்காசியின் முதன்மையான வாக்கு உறுதியாக இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தனது வாயால் பரப்புரையில் கூறினார்.

ஆனால் தற்போது அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் தென்காசியில் எங்கும் செல்ல முடியவில்லை. நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என்று மக்கள் என்னை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வரக்கூடிய தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள். எனவே இதனை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையென்றால் இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும் தானே தனது சொந்த நிதியில் இதனை செய்து முடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார்.

மக்கள் மேம்பட, தானே இந்த திட்டத்தை செய்ய தயாராக உள்ளதாகவும் முதல்வர் ஏமாற்றியது வேதனை அளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top