Close
மார்ச் 7, 2026 4:18 மணி

உசிலம்பட்டி அருகே அதிமுக சார்பில் பொங்கல் விழா: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியார் பொங்கல் என 109 பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

இதில் வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

தை பிறந்தால் வழி பிறக்கும் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் தாய்த்தமிழ்நாடு தலை நிமிர தன்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிற எடப்பாடி  பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என சூளூரை ஏற்கின்ற எடப்பாடியார் பொங்கல் உசிலம்பட்டியில் நடைபெற்று இருக்கிறது.

இன்றைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவக்கி வைப்பதற்காக மதுரைக்கு வந்திருக்கிறார் என்று நினைக்கின்றோம் அவருடைய கவனத்திற்கு மதுரை மக்கள் கவனத்திற்கு மெட்ரோ ரயில் அறிவித்தார்கள். செயல்படுத்தலுக்கு ஒரு திட்ட அறிக்கையை கூட கொடுக்க முடியாத ஒரு அரசாக இருக்கிறது.

58 கால்வாய் திட்டத்தை 40 ஆண்டு கால கனவுத் திட்டத்தில் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் தலைமையில் அம்மாவுடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் அரசாணை வெளியிடுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது இப்பொழுது 5 ஆண்டுகள் இந்த அரசு முடிந்துவிட்ட பிறகும் 58 கால்வாய்க்கு அரசாணை வெளியிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் போராடித்தான் தண்ணீரை பெற வேண்டும் என்ற சூழல் அவல நிலை இருக்கிறது.

முல்லை பெரியார் 152 அடி 142 அடி என்று உயர்த்திக் கொள்வதற்கும் அணை பலமாக வலிமையாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு சட்ட போராட்டத்தில் நடத்தி புரட்சித்தலைவி அம்மா , தொடர்ந்த அந்த சட்ட போராட்டம் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அதனைப் பெற்றுக் கொடுத்தார். அதை இதுவரை ஐந்தாண்டு காலம் ஒரு முறை கூட 152 அடி நீர் தேக்குவதற்கு முதல்வர் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ,

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மதுரை அடையாளமாக இருக்கக்கூடிய சர்க்கரை ஆலை புனரமைத்து இயக்கக்கூடிய 23 கோடி எடப்பாடி தலைமையில் ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தோம். 5 வருடம் ஆகிவிட்டது குழு அமைத்தார்கள் திமுக அரசு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்து 27 கோடி ரூபாய் புனரமைப்பு செய்து ஆளை இயங்கும் என அறிக்கை கொடுத்தார்கள்.

அந்த அறிக்கை குப்பையின் கிடைக்கிறது. இந்த அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலங்காநல்லூர் மண்ணுக்கு வந்த முதலமைச்சர் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் துவங்குவதற்கு முயற்சி எடுப்பாரா மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அதேபோன்று 5000 ரூபாய் தருகிறேன் என்று அன்றைக்கு சொன்னார்கள். முதலமைச்சர் பதவி கையில் வந்த பிறகு இந்த 5 ஆயிரத்தை மறந்து விட்டு இன்றைக்கு 3000 ரூபாய் கொடுக்கிறார்கள். 2500 ரூபாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி கொடுத்தார். ஆனால், ஆண்டுக்கு 100 ரூபாய் வீதம் இன்றைக்கு பொங்கல் பரிசு வழங்கியிருக்கிறார் அன்றைக்கு அவர் சொன்ன 5000 கொடுக்காமல் 3000 ரூபாய் கொடுத்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்து விட்டுள்ளார் இன்றைக்கு கொடியசைத்து வைக்க வந்துள்ளார்.

மண்ணின் மைந்தர்கள் உள்ளூர் கிராம கமிட்டி இருக்கும் இது வீர விளையாட்டு அல்ல, இது எங்களுடைய பொம்மை விளையாட்டு என்று நடத்தியிருக்கிறார்கள். பரிசு கொடுப்பதில் குளறுபடி காளை பிடிப்பதில் குளறுபடி காளை அவுத்து விடுவதில் குளறுபடி பல்வேறு காளைகளை கனவுகளோடு வளர்ப்பது வாடிவாசலில் சீறி பாய்ந்து வர வேண்டும் என்றுதான். ஆனால் பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கு தொடர்பு இருப்பவர்களுக்கு மட்

டுமே காளை அவிழ்த்து விடுவதற்கும் காளை பிடிப்பதற்கும் அனுமதி என்று காளை பிடி வீரர்களும் காளை வரப்போரும் எங்களிடத்தில் முறையிட்டார்கள் அதற்கெல்லாம் தீர்வு எடப்பாடியார் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களாட்சி மலர்கிற போது, மன்னராட்சி முடிவுரை வரும் அப்பொழுது எடப்பாடி மக்களாட்சிக்கு மகுடம் சூட்டுகின்ற முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து இந்த மக்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேற்றித் தருவார்.

ஜல்லிக்கட்டு போட்டி முறையாக நடத்தவில்லை ஜல்லிக்கட்டில் நடத்துகிற கவனத்தை விட இளவரசரை வரவேற்கிற. அவரை மகிழ்ச்சி படுத்துகிற அக்கறை செலுத்துகின்றார்களே தவிர ஜல்லிக்கட்டை முறையாக நடத்தவில்லை.

சுமார் இரண்டு மணி நேரம் தாமதம் என்று சொல்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் எத்தனை காளைகள் அவிழ்த்து விடலாம் கனவுகளோடு வந்திருப்பார்கள் இவர் வந்து உங்கள் கனவு என்ன என்று கேட்கிறார். வாடி வாசலில் காளையை அவிழ்த்து விடும் கனவை சிதைக்கிற இளவரசருக்கு வரவேற்பு கொடுக்கிறதனால் இதனை முறைப்படுத்த வேண்டும்.

முதல் பரிசு அறிவித்ததில் குளறுபடி என்று மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்பவர்கள் முறையிட்டு இருக்கிறார்கள். ப
எதிர்க்கிறேன் என்று சொல்கிறவர்களும் எதிர்ப்பவர்களும் எடப்பாடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சராக புரட்சிதமிழர் எடப்பாடியை ஏற்றுக் கொண்டு வருகின்ற அந்த நல்ல உள்ளங்களையும் தமிழ் நெஞ்சங்களையும் தமிழர்களையும் வீரத்தமிழர்களையும் லட்சியத் தமிழர்களையும் வெற்றித் தமிழர்களையும் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு இருகரம் கூப்பி தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பார்கள் என, பேட்டியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top