Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

அன்னவாசலில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

அன்னவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகிலஇந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்  (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக வேலை செய்யும் விவசாய தொழிலார்களை காலை 7 மணிக்கு வரவேண்டும் என நிர்பந்திப்பதை அரசு நிர்வாகம் மாற்றி வழக்கம் போல் காலை 9 மணிக்கு வருவதற்கு உத்திரவாதபடுத்த வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு   ஒன்றிய செயலாளர்  எம். ஜோஷி தலைமை வகித்தார்.

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் க.சண்முகம். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம்,  ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  டி.சலோமி,  சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, தவிச ஒன்றிய செயலாளர் ஆர்.சி.ரெங்கசாமி,  தலைவர் ரகுபதி. வாலிபர் சங்க தலைவர் எம்.நாகராஜன்,  விதொச ஒன்றிய தலைவர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில்  நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர்

திருவரங்குளத்தில்…

புதுக்கோட்டை மாவட்டம் ,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் ஒன்றிய செயலாளர் தோழர் ஆ.செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

திருவரங்குளம்
திருவரங்குளத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம்

போராட்டத்தை துவக்கி வைத்து விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் எம்.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய தலைவர் எஸ்.ஆறுமுகம். பொருளாளர். பி.எஸ். மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top