Close
செப்டம்பர் 20, 2024 8:34 காலை

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு புகார்

புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சர் மீது சிபிஎம் கட்சி புகார்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் கட்சி நிர்வாகிகளுக்கு கார் மற்றும் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளதன் மீது தேர்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலர் எஸ், கவிவர்மன், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பியுள்ள கடிதம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இந்தத் தேர்தலில் மதிமுக வேட்பாளரை விடவும் கூடுதலாக வாக்கு பெற்றுத் தரும் அதிமுக நகரச் செயலர் களுக்கு கார், வட்டச் செயலர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே, இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top