Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

நம்பியூர் பேரூராட்சி 6 வது வார்டில் அதிமுக வேட்பாளர் பிரபு தீவிர பிரசாரம்

நம்பியூர்

நம்பியூர் பேரூராட்சி 6 -ஆவது வார்டில்  கட்டிடத்தொழிலாளர்களிடம் அதிமுக வேட்பாளர் பிரபு வாக்குகள் சேகரித்தார்

நம்பியூர் பேரூராட்சி 6 -ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பிரபு தீவிர  பிரசாரம் மேற்கொண்டார்.

நம்பியூர் பேரூராட்சிக்குள்பட்ட 6  -ஆவது வார்டில் அதிமுக வினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில், பிப்.8-ஆம்  தேதி இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது. பிப்.19 -ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவுக்கான காலம் குறைவாக உள்ளதால், அரசியல் கட்சியினர் , தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு 6 -ஆவது வார்டுக்கு அதிமுக., சார்பில் கே.ஏ.பிரபு மனு தாக்கல் செய்து உள்ளார்.
ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரது ஆட்சியில் செய்யப்பட்ட திட்டப்பணிகள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவுடன்  வார்டு பகுதியில் செய்யப்பட்ட தார் சாலை,   சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை  திட்டப்பணிகள் குறித்து மக்களிடம்  எடுத்துரைத்து  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top