புதுக்கோட்டை நகராட்சிக்கு 16 -ஆவது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஹவ்வாகனிநைனாமுகமது -க்கு ஆதரவாக புதுக்கோட்டைபெரியபள்ளிவாசலில் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின் 16 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். ஹவ்வாகனி திமுக நகரச்செயலாளர் க. நைனாமுகமது –வின் மனைவி ஆவார்.
திமுக நகரச்செயலாளர் க.நைனாமுகமது ஏற்கெனவே புதுகை நகர்மன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற துணைத்தலைவராகவும் பதவி வகித்து வார்டு மக்களிடம் அறிமுகமானவர். தற்போது திமுக சார்பில் இவரது மனைவி ஹவ்வாகனி களம் காண்கிறார்.
இந்த, 16 -ஆவது வார்டுக்குள்பட்ட தெற்கு 2, 3, 4 வீதிகள், பழைய அரண்மனை, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, சீதாபதிபிள்ளை யார்கோவில் வீதி, சத்திரம் சந்து, பல்லவன்குளம் வடக்கு சந்து, பல்லவன்குளம் வடிமதகு சந்து, சாந்தநாதசுவாமி கோவில் சந்து, முனிசிபல் ஆபிஸ் சந்து, ஜெயில்மோரி சந்து, ரொட்டிக்கார சந்து, பல்லவன்குளம் வடக்கு சந்து மேல்கரை ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச்சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டைக்கு வெள்ளிக் கிழமை வந்த தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தெற்கு 2 -ஆம் வீதியிலுள்ள பெரிய பள்ளி வாசலில் மதியம் சுமார் 1.30 மணியளவில், தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.




