Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

70 வயது ஆனவர்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதிய உயர்வு கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊதிய சங்கத்தினர்

70 வயது ஆனவருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊதிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் முத்தையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகவிலைப்படி அந்தந்த தேதிகளில் வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும். 70 வயது ஆனவருக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

ரயில் பயணங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட பயணச் சலுகைகளை மீண்டும் வழங்கப்பட வேண்டும். பணி ஓய்வு பெறும் நாள் அன்று தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது. சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 ரூபாய் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top