Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

புதுக்கோட்டை அரசு பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

வேலை தரவேண்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை அரசு பண்ணை தொழிலாளர்கள்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்மை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற   கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில செயலாளர் அரசப்பன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகள்:  50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசு விதை பண்ணைகள் மற்றும் எண்ணெய் வித்து பண்ணைகள் பயறு வகை பண்ணைகள் மற்றும் தென்னை உற்பத்தி பண்ணைகள் உள்ளிட்ட அரசு பண்ணைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தின கூலியாக வேறு எந்த விதமான வாழ்வாதாரமின்றி வேலை செய்து வந்த 200 -க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்களை உடல் ரீதியாக வேலை செய்ய தகுதி இருந்தும் வயதை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுப்பதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பண்ணை தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள அரசு பண்ணைகளில் வேலை செய்து பணியிழந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top