Close
மே 13, 2024 5:59 காலை

மணமேல்குடி தாலுக்கா கொடிக்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட கொடிக்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த அரசுக்கு சொந்தமான எந்த பயன்பாட்டிற்கும் இல்லாமல் தரிசாக கிடைக்கும் இடத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இரவோடு இரவாக கனரக இயந்திரத்தை வைத்து குடியிருப்பு பகுதி அப்புறப்படுத்தினர்

அதனை கண்டிக்கும் வகையிலும் அங்கு வசிக்கும் 150 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக செல்லும் சாலையில் ஆலய பாதுகாப்பு இயக்கமும் கொடிக்குளம் பஞ்சாயத்து கிராம பொதுமக்களும் மகளிர் அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு வருவாய் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இலவச வீட்டு மனை பட்டா மாவட்ட நிர்வாகம் உடனே வழங்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆலய பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்

இதற்குப் பிறகும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இதைவிட மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top