Close
மே 12, 2024 11:25 மணி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள்

சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும்,
சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும் பணிக் காலத்திலும் இறந்து போனவர்களுடைய வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

உள்ளிட்ட 10 நிமிஷம் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top