Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

தமிழ்நாடு வங்கியை உருவாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தர்னா போராட்டம்

புதுக்கோட்டை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர்

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் திங்கள்கிழமை தர்னா போராடட்த்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற தர்னா போராட் டத்திற்கு சங்கத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் டி.திருப்பதி, துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கருப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தை ஆதரித்து விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சஙக் மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன், அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் விஏகே.மனோகரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகரக் கூட்டுறவு வங்கி எனத் தரம்பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

நகரக் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்திட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும்  ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்தத் தர்னா போராட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top