Close
அக்டோபர் 5, 2024 7:09 மணி

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெற வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற முது முனைவர் விருத்தாசலனார் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெறச்செய்ய வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற முது முனைவர் விருத்தாசலனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் ஆட்சி மன்றக் குழு, கல்விக்குழு, திட்டக்குழு உறுப்பினராக செயலாற்றியவர், கரந்தை கல்லூரியின் முதல்வர், என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம், கண்ணகி கால்சிலம்பு ஈந்த காரணம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர்.

தமிழ்நாட்டிலேயே இன்று வரை புலவர் பட்டப்படிப்பு நடத்தி வரும் வேங்கடசாமி நாட்டார் கல்லூரியை நிறுவியவர். தனித்தமிழ் போராளி, தமிழாசிரியர், முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13  -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில்  நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு நாட்டார் கல்லூரி அறங்காவலர் முனைவர் மு.இளமுருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர்(ஓய்வு) முனைவர் இரா.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் .

நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் இரா.கலியாபெரு மாள், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார் பின்மை, சோசலிசம்,குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக் கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தமிழ் பண்டிதர்கள், தமிழ் புலவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுமார் 40,000 தமிழ் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உடனடியாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும்,தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும், தமிழ் வழியில் படித்தவர்கள் அனைவ ருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

மனுதர்ம அடிப்படையிலான சனாதன புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது. தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைத்து கல்வியையும் தமிழ் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் , தமிழ் பண்பாடு, கலாசாரத்தை உயர்த்தி பிடிப்போம் என்று நிகழ்வில் உறுதியேற்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், நாட்டார் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் வி.பாரி, வி.தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் வி.விடுதலைவேந்தன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top