Close
ஜூலை 7, 2024 10:25 காலை

பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்… அரசு உதவி செய்யுமா

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் கஸ்தூரி

பொன்னமராவதி அருகே பாம்பு கடித்து கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்ணுக்கு  அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பனையமங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன்(33) .இவருக்கு கஸ்தூரி(27) என்ற மனைவியும் பாலமுருகன், ஹரிஷ், கணேசன் என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம்  பொன்னனை விஷப்பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவரை அநியாயமாக பறிகொடுத்து வாழ்க்கையை இழந்த  கஸ்தூரி தனது  மூன்று குழந்தைகளுடன்  ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே ஆதரவின்றி சிரமப்படும்  கஸ்தூரிக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவரது தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என அப்பகுதிமக்களும் சமூக ஆர்வலர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top