Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

பப்பான்விடுதியில் ஆதிக்க சுவற்றை அகற்ற தீண்டாமை முன்னணி வலியுறுத்தல்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தீண்டாமை ஒழிப்பு முன்னணி

பப்பான்விடுதியில் ஆதிக்க சுவற்றை அகற்ற வேண்டும் முதல் வருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள் ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சுவற்றை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சி.ஜீவானந்தம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாக மாஞ்சான் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பாப்பான்பட்டி. இக்கிராமத்தில் வசிக்கும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் வி. வடிவேல்   மற்றும் 3 பேர் தலா 9 செண்ட் இடத்தில்    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் மேற்படி குடும்பத்தினர் அனைவரும் சுமூகமாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக தியாகராஜன் என்பவர் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், வடிவேல் வீட்டின் பகுதிகளையும் உள்ளடக்கி 16.10.2020 அன்று  சுவர் எழுப்பி உள்ளார்.

அதனை தடுக்க வடிவேல் எவ்வளவோ முயன்றும் பலனில்லை. சுவற்றை அகற்ற அதிகாரிகளை சந்தித்து பலமுறை முறையிட்டும் இதுநாள் வரை சுவர் அகற்றப்பட வில்லை. கோட்டாட்சியரிடம் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிகாரிகள் வழக்கு முடியும் வரை சுவர் எழுப்பக்கூடாது என வலியுறுத்தியும் இந்தச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வடிவேல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆக்கிரமித்து சுவர் எழுப்பியவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். காலம் காலமாக இருந்துவரும் சாதிய படிநிலை மேலாதிக்க மனநிலையின் அடிப்படையிலேயே இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது. அதனாலே இதனை ஆதிக்கச்சுவராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.

இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் வருகின்ற மே 2-ஆம் தேதி மேற்படி ஆதிக்கச் சுவற்றை அகற்றும் போராட்டம் நடத்துவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திட்டமிட்டுள்ளோம்.

எனவே, போராட்டம் தேவையில்லாத அளவிற்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அரசே மேற்படி ஆதிகச்சுவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இதன் மூலம் அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை கட்டிக்காக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top