Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… பரபரப்பு

ஈரோடு

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ஈரோட்டில் போலீசார் அலைக்கழிப்பதாக ஒன்றை வயது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்களம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா.இவருக்கும் அந்தியூர் மைக்கல் பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்நவீன்  என்பவரை காதலித்து   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஒன்றை வயதில் தருண்தேவ் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சந்தோஷ் நவீன் ஜாதியை காரண மாக கூறி பிரேமாவை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் வேறு ஒரு பெண்ணுடன் திருமணமும் செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து டி.எஸ்.பி.அலுவலகம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என பல இடங்களில் ஜாதி பெயரைச் சொல்லி தீட்டியதாகவும் விட்டு சென்ற காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும்  எடுக்காமல் அலைக்கழித்துள் ளனர் .

இதனால் மனமுடைந்த பிரேமா தனது ஒன்றை வயது குழந்தையுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ முயன்றார். புகார் அளிக்க வருபவர்களை காவல்துறை அழைக்கப்பதாக கூறி பெண் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top