Close
செப்டம்பர் 20, 2024 2:56 காலை

புதுக்கோட்டையில் அனுமன் ஜயந்தி விழா கோலாகலம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற அனுமன் ஜயந்தி விழா

புதுக்கோட்டை நகரில் உள்ள பல்வேறு  ஆஞ்சநேயர் கோயில்களில்   அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4  -ஆம் வீ தியில் உள்ள   ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில்    அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காலையில் பல்வேறு வீதி வழியாக ஊர்வலமாக    பால் குடம்  எடுத்து வந்தனர்.

பின்னர்   கோயிலில் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் அபிஷேகம் மஹா  தீபாரதனை ஆராதனை நடந்தது.

ஆஞ்சநேயருக்கு  வெள்ளிக்கவசம் வடை மாலை அலங்காரத்தில்  ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் கோயிலில் உற்சவர்  ராமர் சீதா லெட்சுமணர் ஆஞ்சநேயர்    உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார்.

இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று  ஆஞ்சநேயரை   வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .ஏற்பாடுகளை  அனுமன் திருச்சபைஆன்மிக நெறியாளர் ஆனந்த் சுப்பிரமணிக்குருக்கள்  மற்றும் கோயில்  நிர்வாகிகள் சிறப்புடன் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top