Close
செப்டம்பர் 20, 2024 2:47 காலை

புதுக்கோட்டை   மச்சுவாடி அருள்மிகு குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில்  சித்ரா பெளர்ணமி விழா

புதுக்கோட்டை

மச்சுவாடி குழந்தை முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் அலகு குத்தி செல்லும் பக்தர்கள்

புதுக்கோட்டை   மச்சுவாடி குழந்தை முத்துமாரியம்மன்  சித்ரா பெளர்ணமி விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மச்சுவாடி அருள்மிகு குழந்தை முத்துமாரியம் மன்  கோயிலில்  சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

புதுக்கோட்டை  சாந்தநாதசுவாமி  கோயிலிருந்து  மச்சுவாடி  அருள்மிகு ஸ்ரீ குழந்தை முத்துமாரியம்மன்  கோயிலுக்கு தெற்குராஜவீதி, மேலராஜவீதி, வடக்குராஜவீதி,  பிருந்தாவனம் வழியாக  சென்டை மேளதாளத்துடன்  சென்று    நூற்றுக் கணக்கான   பக்தர்கள்  கரகம், பால்குடம் எடுத்து வந்தும் கரும்பு குழந்தை  தொட்டிலுடனும் , அக்கினிச்சட்டி, அலகு குத்தியும்  தங்களது நேர்த்திக்கடனை  நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை

சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ குழந்தை முத்துமாரியம்மன்  அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு  வகையான அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர்  மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  ஏராளமான பக்தர்ககள்  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top