Close
மே 17, 2024 4:12 காலை

20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகள் தீவிர ஆய்வு செய்யப்படும்: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு

புதுக்கோட்டை

மே.19 ல் விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படுகிறது

20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகள் தீவிர ஆய்வு செய்யப்படும் என புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 ன்கீழ் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும், கிழக்கு கடலோரப் பகுதி (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் (கன்னியாகுமரி நகரம் வரை) மீன்பிடி தடைக்காலம் 2023 ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் ஜுன் 14 -ஆம் தேதிவரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மீன்தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

படகின் உறுதித்தன்மை, எந்திரத்தின் குதிரைதிறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப் பட்டு அதன் அடிப்படையில் மானிய விலையிலான டீசல் மற்றும் இதர மானியத்திட்டங்களுக்கு நிவாரண உதவித் தொகை கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டில் 2023 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப் படகுகளை வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரியும் மீன்வளம் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப் படவுள்ளது.

இந்த ஆய்வின் போது மீனவர்கள் தங்கள் மீன்பிடி விசைப் படகினை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

விசைப்படகுகள் ஆய்வின் போது காண்பிக்கப்படாத படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்குட்படுத்தா மையால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு துறை பொறுப்பேற்காது. நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத பதிவு செய்யப்படாத படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வரி விலக்களிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு கருவிகள் ஆகிய வைகளை தயார் நிலையில் வைத்திடவும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வு குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் விசைப்படகு உரிமையாளர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் விசைப்படகில் ஆய்வுக்குழு ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும்.

படகின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்று ஆகியவைகளின் அசல் ஆவணங்களுடன் அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ஆய்வுக் குழுவினரிடம் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆய்வுப் பணி காலை 7 மணிக்கு தொடங்கும்.

ஆய்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஆய்விற்குட்படுத் தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுடன் அப்படகின் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் 2 புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

விசைப்படகில் உள்ள கடற்பாதுகாப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு கருவிகள் போன்றவற்றின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் துறை மூலம் முழு மானிய உதவியில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகளை ஆய்வுக்கு காண்பிக்க வேண்டும்.

படகு கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகளை தீவிரமாக ஆய்வு செய்து அப்படகுகள் கடலில் செலுத்த தகுதி உள்ளனவா என்பதை படகினை இயக்கி பார்த்து படகு மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

ஆய்வுக்குட்படுத்தப்பாடத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன் படகு உரிமை யாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு உரிமையா ளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத படகுகளை வரும்  19.05.2023 அன்று தவறாமல் ஆய்வுக்குழுவின்  ஆய்வுக்குள்படுத்த வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top