கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் நீதிநாயகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சதாசிவம், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடையில் பணிபுரிந்த உதவி விற்பனையாளர் பிரகாஷ் என்பவர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும் பேசினார்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




