தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு உயிருக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பத்து ஆண்டுகள் பணி முடித்த தகுதியுடைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு 100% பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் போராடிய 16 நாள் போராட்ட களத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 18 நாள் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாலை நேர போராட்டம் நடத்தி வருகின்றனர்.




