தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 51 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த 3 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 47 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
ஏலம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்:
- இடம்: சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகம்
- தேதி: 27.08.2026 (வியாழக்கிழமை)
- நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
பங்கேற்பதற்கான நிபந்தனைகள்:
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் வாகன நேரில் பார்வையிடலாம்.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டை (ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம்) நகலுடன் ரூ. 5,000/- முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற நபர்கள் மட்டுமே ஏல அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் அரசுக்கான ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாகச் செலுத்தி வாகனத்தை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 96884-88933 மற்றும் 96299-19033 ஆகிய கைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.




