Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

குமரமலை பாலதண்டாயுத பாணி கோயிலில் நடந்த வைகாசி விசாக விழா

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலை ஸ்ரீ பாலதண்டாயு தபாணி கோவிலில் வைகாசி விசாகத்தைமுன்னிட்டு விழாவையொட்டி,ஆலயத்தில்   ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு , பாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சந்தன காப்பு மலர் அலங்காரத்தில் மலர் அலங்காரத்தில்  தீபாராதனை  நடைபெற்றது. மாலையில் உற்சவர்   ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி மயில் வாகனத்தில் ஆலயத்தை சுற்றி பவனி வந்து காட்சியளித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன .

ஏற்பாடுகளை பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். இதில் பொதுமக்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு  வழிபட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top