Close
மே 18, 2024 5:30 காலை

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்   அனுமன் ஜெயந்தி விழா

புதுக்க்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்   அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4  -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள  உள்ள   ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில்    அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது. காலையில்  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பல்வேறு வீதி வழியாக ஊர்வலமாக    பால் குடம்  எடுத்து வந்தனர்.

பின்னர்   கோயிலில் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் ,வெள்ளிக்கவசம் வடை மாலை அலங்காரத்தில் மஹா தீபாரதனை  நடந்தது.  ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா

கோயிலில் உற்சவர்  ராமர் சீதா லெட்சுமணர் ,  உற்சவர் ஆஞ்சநேயர்,வராகி அம்மன்  நரசிம்மர், ஹயக்கிரிவர்க்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  தீபாரதனை  நடைபெற்றது பின்னர்  உற்சவர் ஆஞ்சநேயர்     அலங்காரத்தில்  பல்வேறு வீதி வழியாக  பவனி வந்தார்.

இதில்  பக்தர்கள் நீண்ட வரிசையில்  நின்று  ஆஞ்சநேயரை   வழிபட்டனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  அனுமன் திருச்சபை ஆன்மிக நெறியாளர் ஆனந்த் சுப்பிரமணிக்குருக்கள், ஸ்ரீனிவாசன் மற்றும் கோயில்  நிர்வாகிகள் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top