Close
ஜூலை 7, 2024 10:39 காலை

வசந்தபுரி வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு  மண்டல பூஜை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வசந்தபுரி நகர்   ஸ்ரீ வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு  மண்டல பூஜை  நடை பெற்றது            

புதுக்கோட்டை வசந்தபுரி நகர்   அருள்மிகு வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமிக்கு  மண்டல பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டைவசந்தபுரி நகர் வலம்புரி வசந்த விநாயகர் ஆலயத்தில் ஐயப்ப  பஜனை சிறப்பாக  நடந்தது  சுவாமி ஸ்ரீ ஐயப்பனுக்கு  தொடர்ந்து  47 நாட்கள் மண்டல பூஜை  பல்வேறு அபிஷேகங்கள் தீபாராதனை  நடை பெற்றது     48வது  நாள்   நிறைவு நாளில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகங் கள் 18 படி பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது .

பார்வை இசை பள்ளி ஹரிமோகன் குழுவினரின்    ஐயப்ப  பஜனை  பக்தி பாடல்கள்   இசைநிகழ்ச்சி நடைபெற்றது . சிறப்பாக பாடல் பாடியவர்களுக்கு கோயில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி    பாராட்டினார்கள்.

 முன்னதாக  வலம்புரி வசந்த விநாயகர் , கனக துர்க்கையம் மனுக்கும்,முருக பெருமானுக்கும்  பல்வேறு அபிஷேகங்கள் தீபாராதனை  நடை பெற்றது.   கோயில் குருக்கள் சந்தோஷ், பார்த்தசாரதி குருசாமி ,  நிர்வாகிகள் தலைவர் வி.நடராஜன், துணை தலைவர் மூத்த ஓவியக் கலைஞர்  ஆர். .ஆர் .சுப்பு ,செயலாளர் என்.ஆறுமுகம், நிர்வாகக்குழு எஸ்.சாந்தார்  மற்றும் சுற்று வட்டார ஐயப்ப பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top