Close
மே 16, 2024 12:26 காலை

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற சங்காபிஷேகம்

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்தில் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் 108 சங்காபிஷேகம்   சிறப்பு ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேத நாயகி அம்பாள் மலர் அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடைபெற்றது. பூஜை நிகழ்வுகளை, ஆலய நிர்வாகி தெட்சிணாமூர்த்தி மற்றும் மனோஜ் குருக்கள் மகேஷ் குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர்.

புதுக்கோட்டை
கார்த்திகை சோம வார விழாவில் பங்கேற்றவர்கள்

இதில், உபயதாரர்கள் மருத்துவர் பத்மினி சீனியப்பன், பார்வதிஆச்சி, மல்லிகா வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்காபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் வருகை தந்து அம்பாளை தரிசனம் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top