Close
ஏப்ரல் 24, 2026 12:54 காலை

மாநில சதுரங்கப்போட்டி.. சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி மாணவி சிறப்பிடம்

புதுக்கோட்டை

சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவியை வாழ்த்திய பள்ளி நிர்வாகிகள்

மதுரை மாவட்டத்தில் குளோபல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் நடத்திய  இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டி 26.11.2023 -ஆம் தேதி நடைபெற்றது.

அதில் மாணவ மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெ.ஆடலின் ஜெனிடா 15 வயதுக்குள் பட்டோருக் கான  பிரிவில் கலந்து கொண்டு நான்காம் இடத்தை பிடித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவர் தொடர்ந்து மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் பிடித்து வருகிறார்.

வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் செயலர்   ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான்  வாழ்த்தினார். மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித சேகர், சதுரங்கப் பயிற்சியாளர் பார்த்திபன் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஜெ. சிவகுமார்,  ஆசிரியர் கே. ராமச்சந்திரன், அலுவலகப் பணியாளர் என். செந்தில்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் க. முத்துராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top