மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆக. 8ம் தேதி, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை புதுச்சத்திரம், பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.
முகாமில் 5 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய பயோடேட்டா, உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ளவும்.
இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற வெப்சைட்டில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள 04286-222260 அல்லது 6380369124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




