வாடகை பாக்கி செலுத்தாததால், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் 16 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
நாமக்கல் முதலைப்பட்டியில் புதிய புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் 59 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகள் மாநகராட்சி மூலம் ஏல முறையில் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால், சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. இதனால், பெரும்பாலான கடைகள் திறக்கப்படாத நிலையில் உள்ளது.
இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் புதிய புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நீண்ட நாட்களாக மாத வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருந்த, 16 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.




