Close
ஜூலை 24, 2026 10:46 மணி

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா சரிவு

நாமக்கல் மண்டலத்தில் உச்சம் தொட்ட முட்டை விலை திடீரென ஒரே நாளில் 30 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை ரூ. 6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினசரி பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முட்டையின் விலை ரூ. 6.35 ஆக இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 18ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 6.40 ஆக உயர்ந்து வரலாறு படைத்தது.

அதன் பிறகு படிப்படியாக முட்டை உயர்ந்து வந்தது. கடந்த வாரம் நாள்தோறும் 5 பைசா வீதம் அதிகரித்து, ஒரு முட்டையின் விலை ரூ. 6.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு, முட்டை விலை உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 30 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆடி மாதம் பிறந்துள்ளதால், பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதனால் முட்டை பிரியர்கள் பலர் சைவத்திற்கு மாறிவிட்டனர். இதையொட்டி முட்டை விற்பனை 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மேலும் வடமாநிலங்களில் முட்டை விலை குறைந்துள்ளதால், தமிழகத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top