Close
ஜூலை 4, 2024 5:39 மணி

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்களில்  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  சுவாமி வீதி உலா 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் நடைபெற்ர அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்களில்    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு  சுவாமி வீதி உலா நடைபெற்றது,

புதுக்கோட்டை தெற்கு 4  -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள  உள்ள   ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில்    அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது.

கோயிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் வடை மாலை அலங்காரத்தில் மஹா தீபாரதனை  நடந்தது.   பின்னர்  உற்சவர் ஆஞ்சநேயர்     அலங்காரத்தில்  பல்வேறு வீதி வழியாக வீதி உலா  வந்தது. இதில் திரளான பக்தர்கள்   ஆஞ்சநேயரை   வழிபட்டனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை
ஆஞ்சநேயர்

இதே போன்று பழைய பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயில்,  இராணியார் மருத்துவ மனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், பிருந்தாவனம்      வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது  ஏற்பாடுகளை   கோயில்  நிர்வாகிகள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top