Close
செப்டம்பர் 19, 2024 10:44 மணி

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி கோலாகலம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் நடைபெற்ற தைப்பூச தீர்த்தவாரி

புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில் சஞ்சரிக்க விரும்பி பூவுலகை வலம் வந்தனர். அப்போது வெள்ளாற்றின்(சுவேத நதி) அழகில் மயங்கி இந்த இடத்தில் வந்து இறங்கி நதியில் நீராடி மகிழ்ந்து மீண்டும் கைலாயம் சென்றனர்.
சிவனும், பார்வதியும் நதியில் நீராடிய நாள் தைத்திங்கள் பூச நட்சத்திர வேளையாகும். அதனால் இதைப் போற்றும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்த ஸ்தலங்களில் வீற்றிருக்கும் சிவாலங்களிலில் இருந்து அம்பாள், சுவாமி ரிஷப வாகனத் தில் பவனி வந்து வெள்ளாற்றில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இதே நாளில் புதுமணத்தம்பதிகள் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தம்பதிகள் நீராடுவது வழக்கம்.

புதுக்கோட்டை
தைப்பூச தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள்

அதன் தொடர்ச்சியாக, நிகழாண்டில் வியாழக் கிழமை நடைபெற்ற தைப் பூச தீர்த்த வாரி நிகழ்ச்சி யில், திருவேங்கை வாசல் பெரியநாயகிசமேதவியாக் ரபுரீஸ்வரர், புதுக்கோட் டை வேதநாயகி சமேத சாந்தநாதர், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர், விராச்சிலை சௌந்தர நாயகி சமேத வில்வவனேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் இருந்து சப்பரத்தில் எடுத்துவரப்பட்ட உற்சவ மூர்த்திகள் வெள்ளாற்றில் தீர்த்தமாடும் வைபவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top