Close
மார்ச் 7, 2026 9:52 மணி

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமம் ஆர்சி தெருவில் உள்ள காளியம்மன் கோயில் , விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில்,கருப்புசாமி கோவில் ஆகிய கோவில்களில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா  இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருப்புவனம் இராஜ சொக்கலிங்கம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் இரண்டு நாட்கள் யாக பூஜை நடத்தினர்.

காலை 11:20 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்துக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. விநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு பால்,தயிர் உட்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று புனித நீரால் அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காடுபட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்தனர். இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top