Close
செப்டம்பர் 18, 2024 12:30 காலை

இடையமேலுார் சிஇஓஏ   சிபிஎஸ்இ  பள்ளியில் விளையாட்டு விழா

சிவகங்கை

விளையாட்டு போட்டியில் அதிக புள்ளிகளை எடுத்த டோபாஸ் அணிக்கு சுழற்கோப்பையை சிஇஓஏ நிறுவனங்களின் தலைவர் சாமி இயக்குனர்கள் விக்டர் தன்ராஜ், அசோகராஜ், ஜெயச்சந்திர பாண்டி, பிரகாஷ் ஆகியோர்

சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலூர் சிஇஓஏ  சிபிஎஸ்இ பள்ளியின் விளையாட்டு விழா சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23.8.2024)  நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

இதில், ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்ற அணிகளில், 114 வெற்றி புள்ளிகளை எடுத்த  டோபாஸ் அணிக்கு சுழற்கோப்பையை சிஇஓஏ நிறுவனங்களின் தலைவர்  சாமி இயக்குனர்கள் விக்டர் தன்ராஜ், அசோகராஜ், ஜெயச்சந்திர பாண்டி, பிரகாஷ்  ஆகியோர் வழங்கி வாழ்த்தினர்.  விளையாட்டு விழா ஏற்பாடுகளை, பள்ளித் தாளாளர் செல்லத்துரை வழிகாட்டுதலில் முதல்வர் கௌரி  தலைமையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top