Close
அக்டோபர் 5, 2024 6:14 மணி

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்;நிலைப் பள்ளி மாணவர்கள் யோகா உலக சாதனை படைத்தனர்

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
யோகாவில் உலக சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா உலக சாதனை படைத்துள்ளார்கள்.
ஆத்மா யோகா மையத்தின் சார்பாக புத்தாண்டில் புதிய உலக சாதனை படைப்போம் என்ற முனைப்போடு சென்னையில் செயல்படும் யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு என்ற நிறுவனத்துடன் இணைந்து zoom ஆப்-இன் மூலம் ஆன்லைனில் 875 மாணவர்கள் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 8750 யோகா ஆசன நிலைகளை செய்து புதிய உலக சாதனை படைத்தார்கள். இதில் கலந்து கொண்டு பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, யோகா பயிற்றுனர் ஆத்ம யோகி ரெ. பாண்டியன், ஆத்மா யோகா மைய செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top