Close
மே 13, 2024 5:48 மணி

இறகு பந்து, சதுரங்கப் போட்டி: மாநில அளவில் சாதனை படைத்த புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி

புதுக்கோட்டை

இறகுப்பந்து, சதுரங்க விளையாட்டில் வென்ற மாணவிகளை வாழ்த்துகிறார் பள்ளியின் செயலர் ராஜ்குமார் விஜயகுமார்தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு சப் ஜூனியர் தரவரிசை இறகு பந்து போட்டி 6.1.2024 முதல் 11.1.2024 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இப் போட்டியில் தமிழக அணியின் சார்பாகவும்” புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகவும்” சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆர்.டி. திவ்யா 15 வயதிற்கு உட்பட்ட சப் ஜூனியர் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.

 இந்த போட்டியில் மாணவி திவ்யா மூன்றாம் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இவர் தரவரிசையில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தஞ்சாவூரில் 25.1.2024 இம் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆடலின் ஜெனிடா என்ற மாணவி ஐந்தாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அந்த இரண்டு வீராங்கனையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் செயலர் ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் அவர்கள் உதவிகள் செய்து வருகிறார். அவர்களிடம் அனைத்து போட்டிலும் கலந்து கொண்டு இந்திய அளவில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சித.சேகர்  பயிற்சியாளர்கள் இறகு பந்து பயிற்சியாளர் முனைவர் ராமன்,  சதுரங்க பயிற்சியாளர் பார்த்திபன்,  உடற்கல்வி ஆசிரியர் க.முத்துராமலிங்கல், பள்ளி ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top