Close
செப்டம்பர் 13, 2024 1:43 மணி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமுஎகச சார்பில் சமூகநீதி நாள் கவியரங்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமுஎகச சார்பில் நடைபெற்ற சமூக நீதி நாள் கவியரங்கம்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாட்டில் சமூகநீதி நாள் விழா மற்றும் கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் வடகாடு கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி தலைமை வகித்தார். ஊடகவியலாளர் கே.சுரேஷ் வரவேற்றர். கவியரங்கை கரு.காளிமுத்து தொடங்கி வைத்தார். கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் தலைமையில் கவிஞர்கள் சு.மதியழகன், மைதிலி, கீதாஞ்சலி, மு.ராஜா, புத்திரசிகாமணி ஆகியோர் கவிதை வாசித்தனர். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ், திராவிடர் கழக நிர்வாகி மணியரசன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினார்.

மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை எஸ்.ஏ.கருப்பையா ஒருங்கிணைத்தார்.  திக மாவட்டத் தலைவர் அறிவொளி, சங்க நிர்வாகிகள் தமிழரசன், செல்வி, மனோன்மணி, கோகுல், தமிழ்குமரன், துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top