Close
செப்டம்பர் 20, 2024 3:37 காலை

உரங்கள் தட்டுப்பாடு இல்லை: சென்னை உரத் தொழிற்சாலை அறிவிப்பு

சென்னை

உரம்

தமிழகத்தில் உரங்களுக்கான தட்டுப்பாடு ஏதும் இல்லை போதுமான அளவில் இருப்பு உள்ளது என சென்னை உரத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை. இப்பகுதிகளில் உள்ள விவசாயக் கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி இப்பகுதிக்கு மட்டும் சுமார் 2 ஆயிரம் டன் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய தயார் நிலையில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தைப் பொருத்தவரை உரங்கள் தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top