Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பழங்காலப் பொருள்கள் கண்காட்சியை திறந்து வைத்த கவிஞர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்பழங்காலப் பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர்கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளியின்ஆலோசகர் கவிஞர்அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்தக்கண்காட்சியில் இந்தத்தலைமுறை கண்டிராத பலஅரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக அந்தக்காலத்தில் பயன்படுத்திய நெல் குருது, மரத்தாலானஉரல் உலக்கை முதலில் தயாரிக்கப்பட்ட பழைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப் பெட்டி,  கடல்சங்குகள், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட அம்மன்காசு, மற்றும் பழைய நாணயங்கள், . அரியவகை பழங்காலக்கத்திகள், பழைய டிரங்க்பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சி குறித்து பள்ளியின் ஆலோசகர் கவிஞர்அஞ்சலி தேவிதங்கம்மூர்த்தி கூறியதாவது:

இந்தக்கண்காட்சியில்இடம்பெற்றுள்ளபொருட்களைப்பார்க்கிறபோது நமக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிடுகின்றன. மரத்தாலான பொருட்கள், பீங்கான்பொருட்கள், போன்ற அரியவகை பொருட்களை இந்தத்தலைமுறை அறிந்து கொள்ள இந்தக்கண்காட்சி பெரிதும்பயனுள்ளதாக அமைந்துள்ளது.

நெகிழிப் பயன்பாடுகளை தவிர்க்கவேண்டிய கட்டயாத்திலி ருக்கின்ற இந்தக்காலததில் இதுபோன்ற பழையபுராதன பொருட்கள் மறுபடியும் பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கையை பாதுகாக்கலாம் என்றும்  அவர் குறிப்பட்டார்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடந்த கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள்

இந்தபழங்காலப் பொருட்கள்கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்திய முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் நகரத்தலைவர், தொல்லியல்துறை மாவட்டப்பொறுப்பாளர் கவிஞர்சு.பீர்முகமது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்க ளைப் பற்றிய விளக்கங்களை பார்வையாளர் களுக்கு விளக்கினார்.

நிகழ்வில், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதிப் பிள்ளை ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், கவிஞர்கள் சுரேஷ்மான்யா, புதுகைப்புதல்வன், ஈழபாரதி. பேராசிரியர் ராமன், மற்றும் ஏராளமான பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top